கொரோனாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் (60) கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன், வேறு சில உடல்நல பிரச்சனைகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பால்டா சட்டசபை தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமோனாஷ் கோஷ்.
அவரது மறைவுக்கு மேற்கு வங்காள முதல்- மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
‘அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்தார், அவர் அர்ப்பணிப்புடன் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றினார். தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கினார். எங்கள் அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜர்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என மம்தா கூறி உள்ளார்.
No comments