அமிதாப்பச்சன், மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு - விரைவில் மீண்டு வர வேண்டும் டுவீட் செய்த கமல்ஹாசன்
பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்க்கொண்டபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது
இதனை அடுத்து அமிதாப்பச்சனின்
மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று மராட்டிய சுகாதாரத்துறை
மந்திரி தெரிவித்துள்ளார்.
இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
77 வயதான நடிகர் அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை
சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தத் தொலைப்பேசி வாயிலாகத் அமிதாப்பச்சனை
தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும் விரைவில் குணமடைந்து
வீடு திரும்ப வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள் என தெரிவித்து உள்ளார்.
I wish both the Bachchans @SrBachchan @juniorbachchan a speedy recovery.
— Kamal Haasan (@ikamalhaasan) July 12, 2020
I trust the Indian doctors and Sr. Bachchan's will to overcome health hazards. Get well soon and become an icon again for survival and wellness.
No comments