அசோக் செல்வனின் புதிய படம்.. அறிமுகப்படுத்திய கமல்ஹாசன்..
‘ஓ மை கடவுளே’ படத்தோட வெற்றியைத் தொடர்ந்து, அசோக் செல்வனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. அதில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘ஹாஸ்டல்’.
இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் பற்றிய அறிவுப்பு வெளியாகியிருக்கு. அதனை கமல் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். விஷால் வெங்கட் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப்படத்தில், அசோக் செல்வனுடன் இணைந்து அபி ஹாசன், மணிகண்டன், ப்ரவீன் ராஜா, ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், அனுபமா குமார், பானுப்ரியா, இளவரசு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். ராதன் இசையமைக்க, மெய்யேந்திரன் ஒளிப்பதி மற்றும் பிரசன்னா ஜி.கே எடிட்டிங் பணிகளை செய்யவுள்ளனர்.
AR Entertainment தயாரிப்பில்,Trident Arts வழங்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். @AREntertainoffl @tridentartsoffl #SilaNerangalilSilaManidhargal pic.twitter.com/udgrGHzVaT
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2021
No comments