"உக்ரைனில் இருந்து 1038 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்"; அமைச்சர் மஸ்தான் பேட்டி
"உக்ரைனில் இருந்து 1,038 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்" என அமைச்சர் மஸ்தான் சென்னை விமான நிலைத்தில் பேட்டியளித்தார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் ஒரு வாரத்தை கடந்து நடந்து கொண்டிக்கிறது.
அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 181 மாணவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து தனிவிமானம் மூலம் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
வெளிநாட்டு வாழ் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக முதல் அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் மாணவர்கள் உக்ரைனில் இருந்து வீடு செல்லும் வரை அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது.
துறை ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள்.
தற்போது வரை தமிழகத்திற்கு 1,038 மாணவர்கள் மீட்கப்பட்டு அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும், 140 மாணவர்கள் டெல்லியில் உள்ளனர்.
அடுத்தடுத்து விமானங்களில் அவர்களும் வீடு திரும்பி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை திரும்பிய மாணவர்களின் அனுபம்...
கார்கிவ் நகரில் 7 நாட்கள் பதுங்கி இருந்தோம். மிகவும் பயமாக இருந்தது. உணக்குக் கூட கஷ்டப்பட வேண்டிய சூழலாக அமைந்தது. இரண்டு வேளை மட்டுமே உணவு கிடைத்தது. தமிழகம் வந்தது சொர்க்கத்திற்கு வந்தது போல் உள்ளது.
மாணவர் கிஷோர் குமார் கூறியதாவது-
என் கண் முன் நான் படித்த பல்கலை கழகம் அழிந்தது. எனக்கு அது மிகப்பெரிய கவலையை அளித்தது.
உக்ரைன் அதிபர் தனி நபராக போராடி வருகிறார். உலகமே அவரை திரும்பி பார்க்கிறது.
உக்ரைன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என நம்புகிறேன். எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments