அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

உண்மைக்கு புறம்பான தகவல்களை தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவை சேர்ந்த மத்திய சென்னை வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது தன் மீது உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசி இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

எழும்பூர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்பது பொய்யான தகவல் என்று தெரிந்தே தன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக கூறினார்.

எனவே, இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருப்பதாகவும், இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொகுதி நிதியில் ரூபாய் 17 கோடியில் 17 லட்சம் ரூபாய் தான் மீதம் இருப்பதாகவும், தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்கே தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் என்று திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார்.உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-spcial-bus/1252

செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதே போலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்.டி.ஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது என்றார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி