இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 66,134 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். ஆனால் 2024- ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 25,000 கோடி ரூபாயை வெளியே எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 1,539 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்திருக்கின்றனர்.
ஆனால் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதல் 15- ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் 40,710 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவைச் சந்திருந்த நிலையில், அந்நிய முதலீடுகள் குவிந்து வருகின்றனர்.
இதற்கு நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 8.4% ஆக வளர்ச்சி அடைந்துள்ளதாக வெளியான புள்ளி விவரங்களில் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரம், கடன் பத்திரங்கள் சந்தையில் 10,383 கோடியை வெளியே எடுத்துள்ளது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…