இன்று காலை தொடங்கிய ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 25ஆம் தேதியும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.இதில் 50 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட தேர்தலில் 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 415 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், சுமார் 39 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து, வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…