spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

ஆவடி அருகே நகை கடை உரிமையாளரை, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி நகையை கொள்ளை அடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, வீட்டின் கீழ் தளத்தில் ‘கிருஷ்ணா ஜூவல்லர்ஸ்’ என்ற பெயரில் நகை கடை மற்றும் ‘ரேகா பான் புரோக்கர்’ என்ற பெயரில் அடகு கடையும் நடத்தி வருகிறார்.

இன்று (15.04.2024) பகல் 12:00 மணி அளவில், பிரகாஷ் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ‘மாருதி ஸ்விப்ட்’ காரில், இரண்டு கை துப்பாக்கியுடன் வந்த  5 மர்ம நபர்கள், உள்ளே புகுந்து கடையின் ஷட்டர் அடைத்தனர்.
தொடர்ந்து, ‘சிசிடிவி’ இணைப்பை துண்டித்து, பிரகாஷை தாக்கி, அவரது கையை கட்டி போட்டு, துப்பாக்கி முனையில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து, தப்பிச் சென்றனர்.

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

இந்நிலையில், பிரகாஷின் உறவினர் ஒருவர் கடைக்கு வந்த போது, கடை மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின் படி, உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பிரகாஷை கட்டி போட்டு, கொள்ளையடித்தது தெரிந்தது.

இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் படி ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்கள் வந்த கார் பதிவெண் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/udhayanidhi-election-campaign-2/1079

மேலும் சிசிடிவி மூலம் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் மற்றும் டோல்கேட் பகுதிகளில் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முத்தாபுதுப்பேட்டை வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அனைவரும் புதிய புதிய முகமாகவே இருக்கும். பார்த்து பழகிய முகம் இருக்காது. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர்.

Video thumbnail
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா?, டெல்லி அணியா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் | MK Stalin | DMK
01:37
Video thumbnail
பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன் தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது - MK Stalin
01:23
Video thumbnail
இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறக்கப்பட்டுள்ளது
00:35
Video thumbnail
திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டு மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை!
00:58
Video thumbnail
பிரபல நடிகை ஸ்ரீலீலா எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்
00:29
Video thumbnail
ஆட்சியில் பங்கு? தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! கூட்டணியில் சதி? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:58
Video thumbnail
சேலத்தில் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சிறப்பு பூஜை செய்த த.வெ.க.வினர்
00:58
Video thumbnail
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் - வீடியோ வெளியிட்டு நடிகை லைலா நெகிழ்ச்சி!
00:58
Video thumbnail
டார்ச்சர் - பா.ஜ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி; ஆடியோ வைரல்
02:15
Video thumbnail
பெண்கள் என்றாலே அழகுதான்; ஆனால், அறிவுதான் உண்மையான அழகு
01:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img