கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை – மக்களே உஷார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25.04.2024 தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26.04.2024 முதல் 29.04.2024 வரை : தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அடுத்து வரும் தினங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை மற்றும் ஒடிசாவுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img