ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ஈபிஎஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. திரு. ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
மிளகாய் பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டிய பெண்.. வெளியான சிசிடிவி காட்சிகள்
01:32
Video thumbnail
நேபாளத்தில் நடந்தது என்ன? | தப்பி ஓடிய பிரதமர் | அடுத்த பிரதமர் யார் தெரியுமா?
10:19
Video thumbnail
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி
01:01
Video thumbnail
விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பு
01:03
Video thumbnail
சரிவை நோக்கி அதிமுக |விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பு |2026 தேர்தல் 15 -20% தவெக பெரும்
12:38
Video thumbnail
Engine Factory Avadi Recruitment 2025
00:36
Video thumbnail
ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் மிக பெரிய மோதல்
01:04
Video thumbnail
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
01:05
Video thumbnail
செப்டம்பர் 9- துணை ஜனாதிபதி தேர்தல்.. பாஜகவிற்கு புதிய நெருக்கடி..
01:03
Video thumbnail
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் -9 | பாஜகவிற்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி | Modi | BJP
11:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img