spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். நல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருடிவிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் பிச்சை எடுத்த பணம் என நாடகம்.

மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் மேற்பார்வையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் குடிபோதையில் சேலையில் சுற்றி இடுப்பில் மூன்று கட்டு பணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார்.

அப்போது அங்கு துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த கடைக்காரர்கள் சந்தேகத்தின் பெயரில் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

https://www.mugavari.in/bangalore-water-demand-restriction/

இது குறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணம் இல்லாமல் வைத்திருந்த பணத்தை ரூபாய் 1லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையர் பவன்குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் துறையூர், திருமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவில் சென்று பிச்சை எடுத்த பணம் என தெரிவித்தார்.

உதவி ஆணையாளர் (கணக்கு பொறுப்பு) தங்கவேல் ராஜன் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள நோ ஃபுட் நோ வேஸ்ட் காப்பாத்திற்க்கு அனுப்பி
வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பண்ணாரி அம்மன் கோயிலில் பிச்சை எடுத்து திருப்பூர் திரும்பி வந்து நல்லூர் பகுதியில் சுற்றி திரிந்த பொது நல்லூர் ஏடி காலனியில் இருந்த ஒருவீட்டில் ஆட்கள் இல்லாமல், குழந்தைகள் மட்டும் விளையாடி கொண்டிருந்ததை அறிந்து அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளார். அங்கு திறந்து இருந்த பீரோவில் இருந்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை திருடிவிட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். இது தொடர்பாக பணத்தை பறிகொடுத்த நித்யா சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் மணிமேகலை மீது திருட்டு வழக்கு பதிந்து மணிமேகலையை கைது செய்தனர்.

Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
Video thumbnail
அன்று-இன்று காளியம்மாள் பேச்சு #ADMK #NTK #Kaliyammal #EPS #EdappadiPalaniswami
00:51
Video thumbnail
"வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் விரைவு ரயில் சேவை" - எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
01:22
Video thumbnail
மிகவும் மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் விஜய் சிறந்தவர் -நடிகை தமன்னா
00:30
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img