அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பி வந்தது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பி வந்தது

சென்னையில் இருந்து 180 பயணிகளுடன், அந்தமான் புறப்பட்டு சென்ற தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், 180 பயணிகளுடன் மீண்டும், சென்னைக்கே திரும்பி வந்தது.

இதனால் அந்தமான் செல்ல வேண்டிய 180 பயணிகள், சென்னையில் தவிப்பு.

அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பி வந்தது

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் (ஸ்பை ஜெட்) தனியார் பயணிகள் விமானம் இன்று பகல் ஒரு மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 180 பயணிகள் ஏறி அமர்ந்து விட்டனர். ஆனால் அந்தமானில், மோசமான வானிலை நிலவியதன் காரணமாக, விமானம் தாமதமாக இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் புறப்பட்டு சென்றது.

இன்று மாலை 4.30 மணி அளவில், அந்த தனியார் பயணிகள் விமானம், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியது. இந்த நிலையில் விமானத்தை அந்தமானில், தரை இறக்க முடியாமல், நீண்ட நேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் வானிலை சீரடைய வில்லை.

அந்தமானில் மோசமான வானிலை நிலவியது.

இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை மீண்டும், சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம், 180 பயணிகளுடன், இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரை இறங்கியது.

இதை அடுத்து பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை விமானம் மீண்டும் அந்தமான் செல்லும். பயணிகள் இதே விமான டிக்கெட்களில் நாளையோ அல்லது பயணிகளுக்கு விருப்பப்பட்ட வேறு ஒரு நாளிலோ, அந்தமானுக்கு பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர்.

https://www.mugavari.in/no-action-against-congress-till-elections-are-over/

ஆனால் பயணிகள் பலர், அதை ஏற்றுக் கொள்ளாமல், விமானம் குறித்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று இருந்தால், அந்தமானில் தரையிறங்கி இருக்கும். ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் தான், அந்தமானில் தரைக்காற்று வீசத் தொடங்கி, மோசமான வானிலை நிலவியதால் விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்துவிட்டது என்று வாக்குவாதம் செய்தனர். பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியே, விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது என்று கூறி, பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

அதன்பின்பு பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய விமான டிக்கெட்டுகளை, வேறு தேதிகளுக்கு மாற்றிக் கொண்டு, சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

அந்தமான் செல்ல இருந்த 180 பயணிகள், அந்தமான் வரை விமானத்தில் சென்று விட்டு, அங்கு இறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img