
திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. A.L. விஜயன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அஇஅதிமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க என்னால் முடியும். திரு. @mkstalin அவர்களால் முடியுமா? விடியா திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் திமுக 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திர நிதி பெற்றுள்ளது ஏன்? பெருமுதலாளிகளிடம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் பத்திர பெற்றுள்ள திரு. @mkstalin அவர்களுக்கு, தேர்தல் பத்திர முறைகேடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என இவ்வாறு பேசியுள்ளார்.
















