க்ரைம்

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் பெற்ற விசாகப்பட்டினம் வால்டர் ரயில்வே கோட்டா மேலாளர் உள்பட தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகளால் கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வால்டர் ரயில்வே கோட்டத்தில் இருந்து கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டப்பணிக்கு ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனம் பணிகள் தாமதம் செய்ததால் ரயில்வே நிர்வாகம் அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை குறைக்க விசாகப்பட்டினம் வால்டர் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சவுரப் பிரசாத்திடம் ஒப்பந்த நிறுவனத்தினர் கேட்டு கொண்டனர். இதற்காக டி.ஆர்.எம்.சவுரப் பிரசாத் ₹ 25 லட்சம் லஞ்சம் கேட்டார். இதனையடுத்து மும்பை மற்றும் புனேவைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்து அபராதத் தொகையைக் குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து தனியார் நிறுவனத்துக்கு ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டிய ₹. 3.17 கோடி பில் நிலுவையில் உள்ள தொகையை வழங்கியதோடு அபராத தொகையை குறைத்தார்.

இதற்காக இம்மாதம் 16ம் தேதி டி.ஆர்.எம். சவுரப் பிரசாத் ₹ 25 லட்சம் அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்ச பணம் பெற்றுள்ளார். இதனை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் டி.ஆர்.எம். சவுரப் பிரசாத்வுடன் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பிரதிநிதி ஒருவரும், புனேவைச் சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், டிஆர்எம்மிடம் இருந்து ₹ 87.6 லட்சம் பணம், ₹.72 லட்சம் மதிப்புள்ள நகைகள், இதர சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் மற்றும் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாகப்பட்டினத்தில் உள்ள டிஆர்எம் பங்களா மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கிரிமினல் சதி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக டிஆர்எம் உடன் இணைந்து தனியார் அமைப்புகளின் பிரதிநிதிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி