டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்த வருகையின் போது எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரது ஸ்டார்லிங் நிறுவனத்திற்கான உரிமம் தொடர்பாக எலான் மஸ்க் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்திய பயணத்தின் போது டெஸ்லா நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்க்க மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மும்முரம் காட்டி வந்தன. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பயணம் எதிர்பாராத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா செல்ல எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…