அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்
தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தீவிர ரசிகர் ஆவார். டிரம்ப்பிற்கு இந்தியா, தெலங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீதுள்ள அன்பால் கிருஷ்ணா 2019 ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்தபோது தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டார். இந்நிலையில் 2020 ஆண்டு கிருஷ்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணா வீட்டில் உள்ள டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து கொண்டாடி அவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வழங்க வேண்டி கொண்டார். கிருஷ்ணா டொனால்ட் டிரம்ப் மீது கொண்ட அன்பால் அவருக்கு சிலை அமைத்தார். அவரது நினைவு மற்றும் பக்தியை போற்றும் வகையில் கிராம மக்கள் சேர்ந்து டிரம்ப் வெற்றியை கொண்டாடியதாக கிராம மக்கள் கூறினர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…