திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பழமையான ரெங்கநாதர் கோயில் திருவிழாவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள்!
இந்த கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஏழாவது நாளான இன்று (மார்ச் 23) தேரோட்டம் நடைபெற்றது. சகல அலங்காரத்துடன் ரெங்கநாதரும், ரங்கநாயகி தாயாரும் வீற்றிருக்க, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர்.
ஆரணி மக்களவைத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தனும் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார். காந்தி சாலை, அச்சரம்பாக்கம் சாலை, கே.ஆர்.கே. சாலை, சந்நதி தெரு வழியே திருத்தேர் வலம் வந்தது. பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஏற்கனவே இருந்த தேர் 16 ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தது.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
அதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் 63 லட்சம் ரூபாய் நிதியோடும், பக்தர்களின் பங்களிப்போடும் திருத்தேர் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…