spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் 7, 534 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 7,72,360 மாணவர்களும், 8,190 தனித்தேர்வர்கள் என 7. 80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 1,135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 591 பள்ளிகளை சேர்ந்த 62, 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வை எழுதினர்.

மார்ச் 22ம் தேதி பொதுத்தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொடர்ந்து 86 மையங்களில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சரிபார்க்கும் பணிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிவடைந்தது.

இந்த நிலையில் 12 ஆம் பொது தேர்வு ரிசல்டானது www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணைதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் அனைவரும் தங்களது ரிசல்ட்டை ஆர்வமுடன் சரிபார்த்து வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 92.37%ம் அதிகபட்சமாக பெண்கள் 96.44%ம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 35 பேர் தமிழ் பாடத்தில் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 0.53% மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. மேலும் 397 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டமானது 97.45%  மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் வகிக்கிறது. கடைசி மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img