அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் பயோ டெக்னாலஜி படித்த சென்னையைச் சேர்ந்த மாணவி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நான்கு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையோடு புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை கௌரிவாக்கத்தை சேர்ந்த ஆட்சி நிறுவன பணியாளரான மகேஸ்வரனின் மூத்த மகள் நித்யஸ்ரீ அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வழியாக படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள குலோபல் பல்கலைக்கழகத்தில் 100% உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்பை முடித்த அவருக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான இந்தியனா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினல் நான்கு கோடி ரூபாய் உதவித்தொகையுடன் பிஎச்டி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு பொறியியல் கல்லூரியில் படித்து நான்கு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனப் பயிற்சிகளை மேற்கொண்ட நித்யஸ்ரீ எம். இ முதுநிலை பொறியியல் படிப்பும் , எம்.எஸ். முதுநிலை அறிவியல் படிப்பும் படிக்காமலேயே நேரடியாக PHD படிக்க உள்ளார்.
PHD படிப்பிற்கான அடிப்படை அறிவு பயிற்சியும் இருந்தால் பல பல்கலைக்கழகங்கள் முதுநிலை பொறியியல் படிப்பு இல்லாமலேயே நேரடியாக phd வாய்ப்புகள் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளாா்.
கல்வியாளர் நெடுஞ்செழியன் வழிகாட்டுதலோடு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீக்கு அமெரிக்காவில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள வாய்ப்பு தேடி வந்துள்ளது.
ஆராய்ச்சி படிப்பை முடித்து பெண் பொது சுகாதாரத் துறையில் பணியாற்ற வேண்டும் ,உலக சுகாதார அமைப்புகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது லட்சியம் என நித்யஸ்ரீ கூறுகியுள்ளாா்.