தமிழ்நாடு

சாலையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  போக்குவரத்து காவல் துறையினருக்கு – குவிந்த பாராட்டுக்கள்

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  சற்று தொலைவில் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நெஞ்சை பிடித்தவாறு வாகனத்துடன் சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியபோது, மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார். உடனே. உதவி ஆய்வாளர் தனது காவலர்களுடன் சேர்ந்து மேற்படி நபரை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ECG பரிசோதனை எடுக்கப்பட்டது. பின்னர் மேற்படி நபரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர் அறிவுறுத்தியதன்பேரில், உதவி ஆய்வாளர் மகேந்திரன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

விசாரணையில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  முருகன்(32)  என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், வேலை காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது நெஞ்சுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது.  மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல், துணை ஆணையாளர் (தெற்கு) திரு.பண்டி கங்காதர்   சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய  துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமைக் காவலர் M.சுப்ரமணி காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன்  ஆகியோரை நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி