spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கலைஞர் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கலைஞரைப்பற்றி அவதூறாக பேசி சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கலைஞர் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்வேலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான பிரவீன்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். 11.07.2024 அன்று விடுதலை போராட்ட வீரர் மாவீரர் அழகு முத்துகோன் அவர்களின் 314-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்திட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக மக்களால் போற்றப்படுகின்ற தமிழ்நாடு முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி பாடல் உள்ளது. அந்த பாடலை நான் பாடுகிறேன் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் பார்க்கலாம் என்று கூறி “கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி, சண்டாளன் கருணாநிதி” என்று பாடலை பாடியுள்ளார்.

“சண்டாளன்” என்ற வார்த்தை பிணங்களை அப்புறப்படுத்தும் தாழ்ந்த பிறவி என்ற அர்த்தத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.. ஒரு மனிதனின் பிறப்பை இழிவுபடுத்தவே இந்த சண்டாளன் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருளை நன்கு உணர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது அவதூறு பரப்பி, இழிவு செய்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தை தூண்டவேண்டும் என்ற உட்கருத்தோடு பேசியுள்ளார்.

மேற்படி சீமான் அவர்களின் பேச்சு NEWS 18, POLIMER, VELICHAM, RAJ NEWS, DINA MALAR, INDIA TODAY போன்ற தொலைக்காட்சிகளிலும் மற்றும் அதனுடைய YouTube சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சீமான் அவர்களின் பேச்சு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

எனவே தமிழக மக்களால் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி வேண்டுமென்றே “சண்டாளன்” என்ற வார்த்தையை பயன்படுத்தி, மக்களிளின் உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சரிய தொடங்கியது தவெக செல்வாக்கு | தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கப்போகும் விஜய் | TVK | Vijay
18:01
Video thumbnail
“அஜித் இங்க பாரு” மனைவி ஷாலினி உடன் நடிகர் அஜித் பிரியாணி செய்யும் வீடியோ
00:25
Video thumbnail
உங்கள் வீட்டில் விஜய் ரசிகர் இருந்தால் கவனம் - பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள் | TVK | Vijay
14:48
Video thumbnail
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா #tvk
01:25
Video thumbnail
மக்களை ஏமாற்றிய விஜய்
01:06
Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img