spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மின் நுகர்வோரிடமிருந்து கூடுதலாக காப்புத்தொகை வசூலிக்க முடிவு – அன்புமணி கண்டனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல்காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்துள்ள திமுக அரசின் மக்கள் விரோத செயலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை (SECURITY DEPOSIT) வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க மின்சார வாரியம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான ஓராண்டில் பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு, 3 மாதங்களுக்கான தொகை புதிய காப்புத் தொகையாக கணக்கிடப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள காப்புத்தொகைக்கும், புதிய காப்புத்தொகைக்கும் இடையிலான கட்டணத்தை கூடுதல் காப்புத்தொகையாக நுகர்வோர் செலுத்த வேண்டும்.

2022-ஆம் ஆண்டு மின்சாரக் கட்டணம் 52% வரை உயர்த்தப்பட்டது. அதனால், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் வீடுகளுக்கான மின் இணைப்புக்கு ரூ.15,000 வரை கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் கூடுதல் காப்புத்தொகையை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் செலுத்த முடியாது. கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க திமுக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பா.ம.க.வின் எதிர்ப்பால் தான் அது கைவிடப்பட்டது. இப்போதும் கூடுதல் காப்புத்தொகை வசூலிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6% வரை உயர்த்தப்படவுள்ளது. அதற்கு முன்பாக கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பது மனிதநேயமற்ற முடிவு ஆகும். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரக்கட்டணத்தையும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்புத் தொகையையும் உயர்த்துகிறது. திமுக அரசின் இந்த மக்கள்விரோத செயலுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோங்க.. எல்லாம் உங்க பணம் தான் - விஜய்
00:57
Video thumbnail
தவெகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது; என்னை நம்பும் மக்களை ஏமாற்ற மாட்டேன்
01:03
Video thumbnail
தாய்நாடான தமிழ் நாடு தான் என் வீடு.. உங்க விஜய் ஓட்டு கேட்டு மட்டும் வரல. நீதி கேட்டு வந்திருக்கேன்
01:40
Video thumbnail
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது | TVK Vijay
01:03
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் குடும்பத்தலைவிகள்
00:24
Video thumbnail
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்கோங்க | கொளுத்தி போட்ட விஜய் - தகதகவென எரியும் களம் |TVK
24:30
Video thumbnail
சென்னை புறநகர் பகுதியில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்..
00:34
Video thumbnail
திராவிட மாடல் 2.0வில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
5,000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் - மகளிருக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர்
02:14
Video thumbnail
நாயகியாக என்னோட முதல் படமான மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகுது -வீடியோ வெளியிட்டு நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img