spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கொலை மிரட்டல் விடுக்கும் மோசடி நிறுவனம் – காவல்துறை நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொலை மிரட்டல் விடுக்கும் மோசடி நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கில் முதலிடு செய்தால் இலட்சக்கணக்கில் இலாபம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை வார்த்தைக் கூறி. பொதுமக்களை ஏமாற்றி வரும் கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ்(விநிறுவனம் அதன் மோசடிகளுக்கு எதிராக போராடி வரும் கோவை மாவட்ட பா.ம.க. செயலாளர் அசோக் ஸ்ரீநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் நீதி மோசடிகளையும். கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோனை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியை 9048457327 என்ற செல்பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர்மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். நீ ஒற்றை ஆன் நான். ஆனால், நாங்கள் லட்சக்கணக்கில் இருக்கிறோம்.

இனியும் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் 2025&ஆம் ஆண்டில் நீ உயிருடன் இருக்க முடியாது. நீ என் கையில் மட்டும் கிடைத்தால் நா உன்னை போட்டுத்தள்ளி விடுவேன். என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதற்க பயன்படுத்தப் பட்ட செல்பேசி எண் மை வி 3 ஆட்ஸ் ஆட்ஸ் நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மை வி ஆட்ஸ் நிறுவனம், வலைத்தளங்கள் வாயிலாகவும், வலைக்காட்சிகள் மூலமாகவும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு ரூ.360 முதல் ரூ.1.20 லட்சம் வரை பணம் செலுத்தி உறுப்பினரானாம் தாங்கள் அனுப்பும் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது. அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இது வரை பல லட்சம் ரூபாயை சம்மந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது.

புதிதாக உறுப்பினராக சேருவோரிடமிருந்து பணம் வசூலித்து ஏற்கனவே உறுப்பினராக உள்ளர்களுக்கு பணம் வழங்கும் போன்சி(ணெலிதைஷ்) மாதிரி மோசடி இதுவாகும். அதில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உறுப்பினராகும் அனைவரும் ஒரு கட்டத்தில் பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளது. அந்த மோசடியைத் தடுக்க வேண்டும் என்மற்காக பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீGA கோவை ஆட்சியர் மற்றும் காளல்துறையிடம் புகார் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா காவல்துறை தலைமை இயக்குனர் சங்கள் ஜீவால் ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் மனு அளித்தேன். இதன் காரணமாகவே அசோக் ஸ்ரீநிதிக்கும 3 ஆட்ஸ் நிறுவனத்தினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் அஞ்சாது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே நீதி நிறுவன மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை. வேலூர்,திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி,மாநிலம் முழுவதும் 2 லட்சம் மேரிடமிருந்து ரூ.8,025 கொடி வருவித்து மோசடி செய்துள்ளன. இதேபோன்ற மோசடி மை வி 3 ஆடஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடமும் நடைபெறப்போவது உறுதி. அதைத் தடுப்பதற்காகத் தான் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்திருக்கிறோம். மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சக்தி ஆனந்தன் மன்பவர் ஏற்கனவே ஆன்லைன் தொலைக்காட்சி நடத்தி மோசடி செய்தவர் என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் அரசும்,காவல்துறையும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும் கூடமை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு. அந்த நிறுவனத்தின் மோசடிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. அதனால் நான் பா.ம.க. மாவட்டச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்துள்ளது. மோசடி நிறுவனங்களிடம் மக்கள் ஏமாறாமல் தடுக்க மைவி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் மைவி 3 ஆட்ஸ் நிறுவன நிர்வாகிகள் மீது வழக்கும் பறிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பா.ம.க. மாவட்ட செயலர் அசோக் ஸ்ரீநிதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி
01:50
Video thumbnail
ஆந்திரா: ஸ்ரீ வெல்லா அருகே ஆம்னி பேருந்து தீ பற்றி 3 பேர் உயிரிழப்பு
00:44
Video thumbnail
பாஜக தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
00:51
Video thumbnail
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
00:36
Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img