தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் கல்வித்துறை செயலாளராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். மின்வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மின்வாரியத்தின் புதிய தலைவராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். கைத்தறித் துறை செயலாளராக அமுதவள்ளியும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி கல்வி இயக்குநராக சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ், சமூகநலத்துறை இயக்குநராக ஆர்.லில்லி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலளாளர் விஜயராஜ்குமாருக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரித்விராஜ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…