spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், கடந்த 19.04.2024 அன்று தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்-2024 நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு ணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ண பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், இணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், துணை ஆணையாளர்கள் தலைமையில் மேற்படி 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (CAPF), 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் (Tamilnadu Special Police), 3வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படையினரும் (Armed Reserve). 4வது அடுக்கில் சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு. குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர். இகாய மற்றும் ஆகியோர் இணைந்து இன்று (29.04.2024) காலை ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லுரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்து மேற்படி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து. பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
01:45
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
01:48
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
02:04
Video thumbnail
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது..
00:47
Video thumbnail
மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர்தப்பினர்.
00:17
Video thumbnail
தாய்க்காக மகன் கட்டிய தாஜ் மஹால்.. ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
00:40
Video thumbnail
2 சிறுநீரகங்கள் தானம் | உடல் உறுப்பு கொடையாளிக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி.
01:15
Video thumbnail
புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா | மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் கோலாகலம்.
02:05
Video thumbnail
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்
01:23
Video thumbnail
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் - டிரோன் காட்சிகள்
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img