spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மதிமுக தோழர்கள் நீர், மோர் பந்தல்கள் அமைக்க முன் வர வேண்டும் – துரை வைகோ!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதிமுக தோழர்கள் நீர், மோர் பந்தல்கள் அமைக்க முன் வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெயில் வாட்டுகிறது. இக்கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க உதவிடும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் நீர் மோர் பந்தல்களை அமைத்திட முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளவாறு, நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர், குளிர்பானம் வழங்கும் இக்கடமையினை வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பாகச் செய்திட வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சார்பிலும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை;
02:21
Video thumbnail
நாம் இன்று முக்கியமாக நம்பக் கூடாத ஒன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்
02:05
Video thumbnail
காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
01:27
Video thumbnail
மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவெடுக்க வேண்டும்..
02:17
Video thumbnail
த.வெ.க அழைப்பு விடுத்தும் அமைச்சரவையில் பங்கேற்க தயக்கம் காட்டுவது ஏன்? - திருமா சொன்ன விளக்கம்
02:41
Video thumbnail
மருத்துவத்துறைக்கான புதிய வாகனங்கள் வழங்கும் விழாவில் கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்
01:49
Video thumbnail
அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் இருக்கையா? விளக்கம் அளித்த தவெக எம்.எல்.ஏ
02:53
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றார் N. ஆனந்த்
00:22
Video thumbnail
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் செங்கோட்டையன்!
00:20
Video thumbnail
“இன்ஸ்டாகிராம் மூலம் சிறு பிள்ளைகளை வைத்து பரப்புரை செய்து ஆட்சி அமைத்துள்ளனர்”
01:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img