spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுதினம் வாக்குப்பதிவு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடநத 4 வாரங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரமானது இன்று மாலை 6 ,மணியுடன் ஓய்வடைந்தது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக சார்பில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தார்., நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமானும் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு-புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணி சார்பில் அ.தி.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகியவை போட்டியிடுகின்றன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் பா.ஜனதா, அ.ம.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஜ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சியினர் மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமானது தற்போது ஓய்வடைந்தது.

Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img