விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மதுரை மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியை பெரியப்பாவே கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

மே 26- ல் சென்னையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி!

கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் தாய் ஏற்கனவே இறந்த நிலையில், தனது பெரியம்மா மற்றும் பெரியப்பா செந்தில் குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழன்கிழமை சிறுமி கழிவறைக்குள் மயங்கி இருப்பதாக அருகில் இருந்தவர்கள், சிறுமியின் பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் உதவிக்கு அழைத்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணையில் ஈடுபட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராணுவத்தில் பணியாற்றும் சிறுமியின் பெரியப்பா செந்தில் குமார், விடுமுறையில் வந்திருந்ததும், அவரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நாடகமாடியதும் தெரிய வந்தது.

உதகையில் தடியடி….போராட்டம்!

இதனையடுத்து, அவரையும், கொலையை மறைக்க உதவிய அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த பெரியம்மா, பெரியப்பாவே கொடூர செயலை செய்தது. மதுரை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img