மதுரை மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியை பெரியப்பாவே கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.
மே 26- ல் சென்னையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி!
கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் தாய் ஏற்கனவே இறந்த நிலையில், தனது பெரியம்மா மற்றும் பெரியப்பா செந்தில் குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழன்கிழமை சிறுமி கழிவறைக்குள் மயங்கி இருப்பதாக அருகில் இருந்தவர்கள், சிறுமியின் பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் உதவிக்கு அழைத்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணையில் ஈடுபட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராணுவத்தில் பணியாற்றும் சிறுமியின் பெரியப்பா செந்தில் குமார், விடுமுறையில் வந்திருந்ததும், அவரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரையும், கொலையை மறைக்க உதவிய அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த பெரியம்மா, பெரியப்பாவே கொடூர செயலை செய்தது. மதுரை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…