spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 13 பேர் கைது!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சென்னை – லக்னோ அணிகள் மோதிய போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 39வது லீக் போட்டியில், ரூத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 3 ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்னிலும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாய் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் குவித்தது.

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ரன் ஏதுமின்றியும், கேஎல் ராகுல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். அவர் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளூக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் அவர்களை ஜாமினில் விடுவித்தனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img