spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஏரிகள் ,வாய்க்கால்களை தூர்வார வேண்டும் – ஜவாஹிருல்லா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஏரிகள் ,வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழமையான நடைமுறையாக உள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள்,வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்கள்ஆகியவற்றில் உரியத் திட்டமிடலுடன் தூர்வாரும் பணிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். பலமிழந்துள்ள தரைப்பகுதிகளைக் கண்டறிந்து அங்குப் பலப்படுத்தும் பணிகளையும், மதகுகள் மற்றும் ரெகுலேட்டர்கள் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து தேவைப்படும் இடங்களில் உரிய மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் கரைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும், முக்கிய விசேச நாள்களில் சடங்குகளில் ஈடுபடுவோருக்கு ஏதுவாக தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புடன் கூடிய படித்துறைகளையும் அமைத்திடத் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு விரைந்து செய்திட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img