நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களான, கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும், ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும், கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை நகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும், கோவையில் புதிய புத்தொழில் ஹப் தொடங்கப்படும் சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும், மேற்கு சுற்றுவட்டச் சாலைப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு அதன் இணைப்புச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.