spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கும்பகோணம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மானங்கோரை பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து 40 பயணிகளுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தானது அய்யம்பேட்டை அருகே மானங்கோரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தெறிக்கெட்டு ஓடியது. இதனையடுத்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் (வயது 50) பேருந்தின் இடிபாட்டிற்குள் சிக்கியதில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 25 பேரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img