spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மதுரை அருகே 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரை அருகே 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியளவில் முடிவடைகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் ஆகும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை அருகே 5 கிராம மக்கள் இன்று நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதில் கே.சென்னாம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால் கேரளாவைச் சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் இறைச்சி கழிவுகளை சுத்திகரிப்பதால் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஓட்டு போடமாட்டோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை எஸ்.பி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 5 கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Video thumbnail
வேலூரில் மாமூல் கேட்டு த.வெ.க-வினர் மிரட்டல்
02:15
Video thumbnail
பேட்டரி காரில் தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்க்கும் முதலமைச்சர் விஜய்
00:50
Video thumbnail
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
01:00
Video thumbnail
அரசினர் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்..
01:01
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகான்
02:25
Video thumbnail
அமைச்சராக பதவியேற்றார் விசிக எம்எல்ஏ வன்னி அரசு
02:14
Video thumbnail
"ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் இருக்கிறது"
01:59
Video thumbnail
அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் - விசிக தலவைர் தொல்.திருமாவளவன்
02:14
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த ஐயுஎம்எல் நிர்வாகிகள்..
00:25
Video thumbnail
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் ஆளுநர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய் குழு புகைப்படம்..
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img