அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்
ஒன்றிய அமைச்சரும் நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு கிரிவலம் மேற்கொண்ட ரோஜா இன்று காலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், எங்களுடைய தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வர் ஆகவேண்டும் என மனப்பூர்வமாக வேண்டியுள்ளேன். நான் மூன்றவாது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை வேண்டியுள்ளேன் என்று தெரிவித்தார்.