காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் இறந்து போன சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவை தரக்கோரி உதவி கமிசனரிடம் மனு அளித்துள்ளனர்.

கை கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே கொன்னுட்டாங்களே என அழுதபடி உறவினர் ஆதங்கம்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி. டி.சங்கர் கடந்தாண்டு காரில் சென்று கொண்டிருந்தார். நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிபட்டு பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(29), ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வந்த இவர் உட்பட ஏழு பேரை நசரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த சாந்தகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சென்ற போலீசார் சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதில் சாந்தகுமார் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போனார்.

இதையடுத்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தாக்கியதால் தனது கணவர் இறந்து போனதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இறந்து போன சாந்தகுமார் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

மேலும் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தர வேண்டும் என அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கூறுகையில், தனது கணவரை வேண்டுமென்றே பணத்தை பெற்று கொண்டு போலீசார் கொலை செய்துவிட்டதாகவும் இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசாரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/satyapradha-sahu-press-meet/1287

தமிழக அரசு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அதுவரை தனது கணவரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து விட்டு சென்றனர். கொலை வழக்கில் சிறையில் இருந்து வந்தவர் போலீஸ் விசாரணையில் இறந்து போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அங்கு வந்த இறந்து போன சாந்தகுமாரின் உறவினர் ஒருவர் கை, கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே உயிரை எடுத்து விட்டார்களே என சோகமாக அழுதபடி பேசியது சோகத்தை ஏற்படுத்தியது.

Video thumbnail
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை | சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுப்பாரா? | Chandrababu Naidu | MK Stalin
10:14
Video thumbnail
முதல்வர் A1; ஆணவத்தின் உச்சம் பாஜக தலைவர்களின் பேச்சு | MK Stalin | Annamalai | H Raja | BJP | DMK
10:12
Video thumbnail
முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா? | நல்லிணக்கத்தை பாழ்படுத்தும் பாஜக | MK Stalin | BJP
07:37
Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img