குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி

குன்றத்தூர் அருகே சாலையோரத்தில் குடிபோதையில் படுத்திருந்த நபரிடம் தகராறு தலையில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் பலி.

குடிபோதையில் தகராறு - ஒருவர் பலி

 

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் சாலை ஓரத்தில் சிலர் தாக்கி கொள்வதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்(35), என்பதும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

குடிபோதையில் தகராறு - ஒருவர் பலி

நேற்று இரவு குடிபோதையில் சம்பவம் நடந்த இடத்தில் சாலை ஓரத்தில் படுத்திருந்தபோது கோவூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குடிபோதையில் அங்கு வந்த போது யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து அவரிடம் தகராறு செய்த நிலையில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் பின்னர் போதையில் வந்த கணேசின் நண்பர்கள் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/world-record-of-a-4-year-old-boy/3074

இதையடுத்து கணேசனை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் சாலையோரத்தில் படுத்திருந்தபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
“சினிமாவில் மின்னும் எல்லா நட்சத்திரமும் உதயசூரியன் ஆக முடியாது” – அமைச்சர் கோவி.செழியன்
02:05
Video thumbnail
அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
01:00
Video thumbnail
SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டனம் அறிக்கையை அறிவித்தது தவெக தான் | RajMohan | TVK
04:56
Video thumbnail
பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் கூற முடியாது என விஜய்யை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு
00:44
Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img