பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
பிரசித்திப் பெற்ற பழனி முருகன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் அதிகளவில் பழனி முருகன் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மலை அடிவாரத்தில் பக்தர்கள் பல்வேறு காவடிகளை சுமந்து மேள தாளங்களுடன் காவடி ஆட்டம் ஆடி சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை Vs குஜராத் போட்டி- டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?
முக்கிய நிகழ்வாக இன்று (மார்ச் 24) மாலை 04.00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.