spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்த டிரான்ஸ்ஃபார்மரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2 மணி நேரம் போராடி உயிரை பணயம் வைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30000 க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது. இந்தநிலையில் இரவு சுமார் 11 மணியளவில் 16000kvA உயரழுத்த ட்ரான்ஸ்பார்மரில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது மேலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் திரவ வேதி கலந்த foam அடித்து தீயை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயிலில் தீ பரவியதால் கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. தீயானது கொளுந்து விட்டு மள மளவென எரிய துவங்கியது.

இதனால் வான் உயர கரும்புகை எழுந்து குடியிருப்பு பகுதியில் சூழ்ந்ததால் பொது மக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து ஆவடி,அம்பத்தூர், செங்குன்றம்,பூந்தமல்லி மற்றும் ஆவடி மத்திய அரசுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட 5 நிலையங்களிலிருந்து 30கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க கூடிய பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு வீரர்கள் foam பிழ்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக பட்டாபிராம்,இந்து கல்லூரி, சேக்காடு, தண்டுரை, முத்தாபுதுபேட்டை, கோபால புரம் உள்ளிட்ட பகுதி முழுவதும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே தினம் தோறும் இரவு நேரங்களில் அறிவிக்க படாத மின் வெட்டு நிலவி வரும் சூழலில்,இந்த தீ விபத்து காரணமாக இரண்டு மூன்று நாட்களுக்கு மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மின் தடை காரணமாக முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் என பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து பட்டாபிராம் போலீசார்,தீயணைப்பு அதிகாரிகள், மின்வாரிய துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரூம் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் மின்சார துறை அமைச்சர் மற்றும்
மின் உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் வழங்கி இப்பகுதி மக்களுக்கு விரைவில் மின்சாரம் வழங்கிட அறிவுறுத்தினார்.

 

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img