spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம்…மூடி மறைக்க முயல்வதா? – ராமதாஸ் ஆவேசம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள்
சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதா? என கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ்
கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் புதன் கிழமை பெய்த கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்காக உழவர்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்ததால் அவை பாதிக்கப்படவில்லை என்றும், உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4500 நெல் மூட்டைகள் மட்டும் தான் சிறிதளவு பாதிக்கப்பட்டதாவும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளில் பெரும்பாலானவை உழவர்களுக்கு சொந்தமானவை. அந்த நெல் மூட்டைகள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தால் அவை பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்னும் கேட்டால் உழவர்கள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்காகத் தான் கிடங்குகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் மட்டுமே சட்டவிரோதமாக கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உழவர்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததற்கு இதுவே காரணம். இந்த மோசடியை மூடி மறைக்கவே ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உழவர்களின் நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கான கிடங்குகள் , அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

செஞ்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருவதால், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளைத் தடுக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுத்த நாளே அரவை நிலையங்களுக்கோ, மண்டல அளவிலான கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
Video thumbnail
ராஜகுரு நியமனத்தில் அம்பலப்பட்டுப் போன விஜய் | கருவாட்டுச் சாம்பாராக மாறிய தவெகவின் கொள்கை | Vijay
12:15
Video thumbnail
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேச்சை கவனமாக குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்
02:03
Video thumbnail
"என் அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களே" - சத்யராஜ் வீடியோ வெளியீடு
01:07
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:03
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை | சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக MLA க்கள், விஜய்யை சந்தித்தனர்
13:29
Video thumbnail
விஜய் முதல்வரானது குறித்த கேள்வி.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!
00:23
Video thumbnail
சென்னையில் எத்தியாட் விமானத்தில் திடீர் கோளாறு.. அவசர நிறுத்தம்
00:27
Video thumbnail
விஜய்க்கு பாராட்டுகள்.. - சட்டப்பேரவையில் பிரேமலதா பேச்சு..
00:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img