spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , கடத்திச் சென்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியே நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் புகார் அளிக்கும் போது அதனடிப்படையில் அடுத்த நிமிடமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.ஜெயக்குமார் விவகாரத்தில் மட்டுமின்றி, அனைத்து விவகாரங்களிலும் இதே அலட்சியத்துடன் தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதற்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தான் எடுத்துக் காட்டு ஆகும்.

ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க வேண்டும்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
Video thumbnail
"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" - விஜய் பேச்சு
00:55
Video thumbnail
டப்பா என்ஜின் உள்ளிட்ட எந்த என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெக தான்
01:03
Video thumbnail
தமிழ்நாடு விழிப்புணர்வு பெற காரணம் திமுக தான்
01:02
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன?
01:13
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன? | தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு சமூக நீதி தான் காரணம்
12:19
Video thumbnail
"நாங்க பாஜவுக்கு அடிமையா.. திமுக அலுவலகம் தான் டெல்லியில் இருக்கு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
01:19
Video thumbnail
"எடப்பாடி ஆட்சியில் 13 பேரை குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள்" -செங்கோட்டையன்
01:28
Video thumbnail
ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடிரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடி
01:13
Video thumbnail
பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img