spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு – ராமதாஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜெயக்குமார் படுகொலை சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , கடத்திச் சென்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியே நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எழுத்து மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் புகார் அளிக்கும் போது அதனடிப்படையில் அடுத்த நிமிடமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.ஜெயக்குமார் விவகாரத்தில் மட்டுமின்றி, அனைத்து விவகாரங்களிலும் இதே அலட்சியத்துடன் தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதற்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தான் எடுத்துக் காட்டு ஆகும்.

ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன்மூலம் மக்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை காவல்துறை மீட்டெடுக்க வேண்டும்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
Video thumbnail
விஜய்க்கு வேல் கொடுத்து வரவேற்ற தொண்டர்கள் #Puducherry #TVKVijay #TVK #Vijay
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img