spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

ஆவடி அருகே நகை கடை உரிமையாளரை, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி நகையை கொள்ளை அடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, வீட்டின் கீழ் தளத்தில் ‘கிருஷ்ணா ஜூவல்லர்ஸ்’ என்ற பெயரில் நகை கடை மற்றும் ‘ரேகா பான் புரோக்கர்’ என்ற பெயரில் அடகு கடையும் நடத்தி வருகிறார்.

இன்று (15.04.2024) பகல் 12:00 மணி அளவில், பிரகாஷ் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ‘மாருதி ஸ்விப்ட்’ காரில், இரண்டு கை துப்பாக்கியுடன் வந்த  5 மர்ம நபர்கள், உள்ளே புகுந்து கடையின் ஷட்டர் அடைத்தனர்.
தொடர்ந்து, ‘சிசிடிவி’ இணைப்பை துண்டித்து, பிரகாஷை தாக்கி, அவரது கையை கட்டி போட்டு, துப்பாக்கி முனையில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து, தப்பிச் சென்றனர்.

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

இந்நிலையில், பிரகாஷின் உறவினர் ஒருவர் கடைக்கு வந்த போது, கடை மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின் படி, உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பிரகாஷை கட்டி போட்டு, கொள்ளையடித்தது தெரிந்தது.

இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் படி ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்கள் வந்த கார் பதிவெண் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/udhayanidhi-election-campaign-2/1079

மேலும் சிசிடிவி மூலம் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் மற்றும் டோல்கேட் பகுதிகளில் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முத்தாபுதுப்பேட்டை வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அனைவரும் புதிய புதிய முகமாகவே இருக்கும். பார்த்து பழகிய முகம் இருக்காது. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர்.

Video thumbnail
"அமைச்சராக நீடிக்க தகுதி இல்லாத நபர் நிர்மல் குமார்"- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
00:27
Video thumbnail
டெல்லியில் திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் அவதி
00:23
Video thumbnail
"பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னார்; எந்த பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னாரா?" - ஆதவ் அர்ஜுனா
01:47
Video thumbnail
சட்டமன்றத்தை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
01:51
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய் | இன்னும் தேர்தல் பிரசார பாணியில் பேச்சு | CM Vijay | TVK | DMK
12:35
Video thumbnail
பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் அம்பேத்கர் கனவு நிறைவேறியுள்ளது..
02:24
Video thumbnail
"ஆமாங்க.. தெரியாது தான்.." எங்களுக்கு ஊழல் பண்ண தெரியாது, மக்கள் பணத்தை சுரண்ட தெரியாது..- முதல்வர்
02:35
Video thumbnail
திமுக ஆட்சியின் 25 முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்றதால் 2.3 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு..
02:36
Video thumbnail
ஆளுநர் உரையில் சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி
01:36
Video thumbnail
தண்ணீர் பாட்டில் விவாதம்.. OPS சொன்ன வார்த்தை.. சிரிப்பில் குலுங்கிய பேரவை..
02:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img