spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சென்னை அருகே திமுக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – போலீசார் விசாரணை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை ஆர்கே நகரில் திமுக பெண் நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்ப சேர்ந்த சரஸ்வதி இவர் 38 வட்ட துணைச் செயலாளராக உள்ளார். வசந்தா என்பவருக்கு சொந்தமான வீட்டை ஒரு லட்ச ரூபாய் லீசுக்கு கொடுத்து கடந்த ஒரு வருடங்களாக சரஸ்வதி குடும்பத்துடன் வசித்து வந்தார். லீஸ் முடிந்த பின்பு வீட்டின் உரிமையாளர் வசந்தாவிடம் சரஸ்வதி 3000 ரூபாய் மாத வாடகை கொடுத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி லீஸ் முடிந்து நிலையில் வசந்தியிடம் சரஸ்வதி லீஸ் பணம் கேட்டு உள்ளார். அல்லது ஒரு லட்சத்து 50,000 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு வீடு எழுதி கொடு என்று சரஸ்வதி கேட்டு உள்ளார். இதனையடுத்து சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில்
சரஸ்வதி மற்றும் அவருடைய மகள் ஜெகதீஸ்வரி, மற்றும் அவரது கணவர் ஆணந்த் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டுவதாக வசந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரி பேரில் போலீசார் இரு தரப்பினரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது வசந்தாவிடம் வரும் ஆகஸ்ட் மாதம் லீஸ் பணத்தை கொடுத்து விடு என்று போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் சமாதானம் ஆகி சென்றனர். மேலும் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டு வீட்டைக் கொடுத்து விடுங்கள் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு வசந்தாவின் மகன்கள் தனது கூட்டாளியுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு சரஸ்வதியை கத்தியால் குத்தியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து ஆர்கே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மணி (எ) அப்பு மணி, கணபதி, மற்றும் அவருடைய நண்பரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img