spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானம் தடுத்து நிறுத்தப்படும் – சீமான்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுத்திருப்பதோடு, தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுமெனவும் பேரறிவிப்பு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்

 

Video thumbnail
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
01:47
Video thumbnail
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
00:45
Video thumbnail
"பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது."-ரஞ்சனா நாச்சியார்
01:39
Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img