spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ராஜீ மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ஏ ராஜீ மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உதகை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் திரு எச். எம். ராஜு அவர்கள் நேற்று மாலை உடல் நலக்குறைவால் தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். அவர் 1989, 1991 மற்றும் 2001 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழக சட்டப் பேரவையில் உதக மண்டலம் தொகுதி மக்களுக்காக தன்னுடைய தன்னலமற்ற பங்களிப்பை ஆற்றியவர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும் திறமையாகவும், நியாயமாகவும் செயல்பட்டவர்.

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களின் அன்பை இன்றளவும் வென்றெடுத்த திரு ஆர். பிரபு அவர்களால் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக 1989 இல் அறிமுகமான திரு எச். எம். ராஜு அவர்கள் சிரித்த முகத்தோடும், எளிமையாகவும், பண்போடும் அனைத்து தரப்பு மக்களிடையே பழகி, அனைவரின் குறைகளை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அப்பழுக்கற்ற பெருமகனார். அவரது மறைவு நீலகிரி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

 

திரு எச். எம். ராஜு அவர்கள் உதகை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ஆற்றிய அளப்பறிய பணிகளும், தன்னலமற்ற சேவைகளும் என்றென்றும் அனைத்து தரப்பு மக்களின் மனதில் மட்டுமல்லாமல், அனைத்துக்கட்சி இயக்க நண்பர்கள் மனதிலும் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் எவருக்கும் இருக்காது. அவரது நினைவுகளோடு பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நீலகிரி மாவட்ட அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது ஆழந்த இறுதி அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img