முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ராஜீ மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ஏ ராஜீ மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உதகை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் திரு எச். எம். ராஜு அவர்கள் நேற்று மாலை உடல் நலக்குறைவால் தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். அவர் 1989, 1991 மற்றும் 2001 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழக சட்டப் பேரவையில் உதக மண்டலம் தொகுதி மக்களுக்காக தன்னுடைய தன்னலமற்ற பங்களிப்பை ஆற்றியவர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும் திறமையாகவும், நியாயமாகவும் செயல்பட்டவர்.

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களின் அன்பை இன்றளவும் வென்றெடுத்த திரு ஆர். பிரபு அவர்களால் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக 1989 இல் அறிமுகமான திரு எச். எம். ராஜு அவர்கள் சிரித்த முகத்தோடும், எளிமையாகவும், பண்போடும் அனைத்து தரப்பு மக்களிடையே பழகி, அனைவரின் குறைகளை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அப்பழுக்கற்ற பெருமகனார். அவரது மறைவு நீலகிரி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

 

திரு எச். எம். ராஜு அவர்கள் உதகை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ஆற்றிய அளப்பறிய பணிகளும், தன்னலமற்ற சேவைகளும் என்றென்றும் அனைத்து தரப்பு மக்களின் மனதில் மட்டுமல்லாமல், அனைத்துக்கட்சி இயக்க நண்பர்கள் மனதிலும் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் எவருக்கும் இருக்காது. அவரது நினைவுகளோடு பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நீலகிரி மாவட்ட அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது ஆழந்த இறுதி அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img