காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தயார் – செல்வப்பெருந்தகை!

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தயார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கத்தின் முகப்பில் நேற்று நீர், மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்கம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ்தா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய்திறக்கவில்லை. இந்தியாவியேலே குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.

மத்திய அரசுக்கு தெரியாமல் இவ்வளவு லட்சம் கோடி போதைப் பொருள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உளவு அமைப்புகள், கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்டவை இருக்கிறது. பாஜகவிற்கு தெரியாமல் போதைப் பொருள் எப்படி இந்தியாவிற்கு வர முடியும். பா.ஜ.கவின் ஆட்சியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என கேள்வியெழுப்பினார். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதை பொருட்களால் பாழடைவதற்கு பாஜகதான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பாஜக. இதுகுறித்தும் பேசவேண்டும் என கூறினார். காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமால் ஒரு கல்லைக் கூட வைக்க முடியாது. ஒழுக்காற்று குழு பாராபட்சமாக இருக்கிறது.

ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைய போவதால், நோட்டாவின் கீழ் வாக்கு பெறுவதற்கு சட்டமன்ற தேர்தலுக்கு அண்ணாமலை தயார் ஆகிறார். கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்க வேண்டும். அமேதி, ரேபரேலி தொகுதியில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறவுள்ள நிலையில் காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்காது ஏன் என்று கேள்வியெழுப்பினார். அங்கு போட்டியிட பயப்படுகிறதா ? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடித்தவர்கள் நாங்கள் என்றும் எங்களுக்கு பயம் இல்லை. என இவ்வாறு கூறினார்.

Raj

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி