spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பிரதமர் மோடிக்கு இனி வருகிற தேர்தல்களில் மக்கள் நிச்சயம் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் – செல்வப்பெருந்தகை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

பிரதமர் மோடிக்கு இனி வருகிற தேர்தல்களில் மக்கள் நிச்சயம் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை இராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி திரிபு வாதங்களைச் செய்திருக்கிறார். இதன் மூலம் அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி அப்பட்டமாக மீறியிருக்கிறார். அவரது இந்தப் பரப்புரையின் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஊழலை திசைதிருப்ப கச்சத்தீவை கையில் எடுத்த பா.ஜ.க.

முதற்கட்ட தேர்தல் எதிர்பார்த்த வெற்றியைத் தராது என்கிற நிலையில், தோல்வி பயத்தின் காரணமாக மிகமிக இழிவான பிரச்சாரத்தை அரசியல் ஆதாயத்திக்காக பிரதமர் மோடி செய்திருக்கிறார். அவரது உரையின் மூலம் பிரதமர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை உறுதிபடுத்தியிக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்காக சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார்.

மேலும், “அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்பவர்கள் ஊடுறுவல்காரர்கள்” என மறைமுகமாக இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார். இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனிவருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப்புகட்டுவார்கள். முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடி எதிர்ப்பு அலை, நாடு முழுவதும் வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்ததன் விளைவுதான் மோடியின் இந்த வெறுப்புப்பேச்சு. இதன் மூலம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
Video thumbnail
மாற்றம் வேண்டி மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் - நடிகர் சிவக்குமார்
02:40
Video thumbnail
MLA-களின் பெயரை வைத்து மக்கள் வாக்களிக்கவில்லை; சின்னத்திற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்
00:58
Video thumbnail
டெல்லி பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய் #Vijay #CMVijay #Delhi #Tamilnadu
01:40
Video thumbnail
நீங்க தூயசக்தியா விஜய்! பித்தலாட்ட சக்தி - டி.டி.வி.தினகரன்
02:26
Video thumbnail
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.. அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்..
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img