ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டுச்சாலையில் ஆட்டோவில் முட்டை சப்ளை செய்வது போல போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டுச்சாலை சந்திப்பில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த ஆட்டோவை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் முட்டைகள் இருந்தன. மேலும் அதற்கு அடியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் , பாக்கு போன்ற போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த திருவள்ளூர் பாப்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (34), சிவா (24) உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்ததுடன் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள 77 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருட்கள் சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…