spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவருடை தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமி, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துவந்துள்ளார்.

வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்றுவிட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர்கள் அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்யம் திரையரங்கில் ‘யோதா’ திரைப்படத்தை பார்த்த தோனி!

சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.

வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி

காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில் குமார் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கொலையை மறைக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Video thumbnail
மக்கள் முட்டாள் இல்லை! - ஆதவ் அர்ஜுனாவை விளாசும் ஜூலி #election2026
01:08
Video thumbnail
தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கப்போகும் விஜய் #tvk #vijay
01:28
Video thumbnail
விஜய் பற்றியும், அவர் கட்சியை பற்றியும் விமர்சிக்க மாட்டேன். - இயக்குநர் சுந்தர் சி பேட்டி
01:05
Video thumbnail
சரிய தொடங்கியது தவெக செல்வாக்கு #tvk #vijay #election2026
01:19
Video thumbnail
தமிழ்நாடு முன்னேற்றமில்லைன்னு சொல்றவங்களுக்கு இந்த வீடியோ #TamilNadu
01:55
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாமக தலைவர் அன்புமணி
01:01
Video thumbnail
"இன்றும் பலர் வீடுகளில் கலைஞர் டிவி" அதிமுக பொருட்கள் காயிலான் கடையில் உள்ளது!
01:46
Video thumbnail
தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர, ஏழாவது முறையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும்
01:25
Video thumbnail
சரிய தொடங்கியது தவெக செல்வாக்கு | தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கப்போகும் விஜய் | TVK | Vijay
18:01
Video thumbnail
“அஜித் இங்க பாரு” மனைவி ஷாலினி உடன் நடிகர் அஜித் பிரியாணி செய்யும் வீடியோ
00:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img