வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவருடை தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சிறுமியின் அண்ணன் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமி மட்டும் தனது வளர்ப்பு பெற்றோருடன் இருந்துவந்துள்ளார்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்துவந்த சிறுமி, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துவந்துள்ளார்.

வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிறுமி கழிவுறைக்குள் சென்றுவிட்டு கதவு திறக்கவில்லை என கூறி அருகில் உள்ளவர்களை வளர்ப்பு பெற்றோர்கள் அழைத்துள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்தபோது பெற்றோர்களே கதவை உடைத்து சிறுமியை தூக்கி வந்து வள்ளுவர்காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்யம் திரையரங்கில் ‘யோதா’ திரைப்படத்தை பார்த்த தோனி!

சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி உயிரிழந்தபோது வீட்டில் சிறுமியுடன் இருந்த வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரையும் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.

வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி சந்திரபாண்டி

காவல்துறையினர் வளர்ப்பு பெற்றோரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான பெரியப்பா செந்தில் குமார் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் பின்னர் அங்கு வந்த செந்தில்குமாரின் மனைவி சந்திரபாண்டி வளர்ப்பு மகளின் உயிரிழந்த நிலையில் கொலையை மறைக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இருவரையும் கூடல்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் போக்சா நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img