வங்கதேசத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்ததாக தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூரில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஜான் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
அவரிடம் இருந்த தமிழ்நாடு அரசின் அடையாள அட்டையை பறிமுதல் செய்த வங்கதேச ராணுவம், இந்திய ராணுவத்திடம் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கைதான ஜான் செல்வராஜிடம் இருந்து ஏராளமான அமெரிக்க டாலர்கள், இந்திய பணம் மற்றும் இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஜான் செல்வராஜ், எதற்காக வங்கதேசம் வந்தார்.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
அவருக்கும், சர்வதேச ஹவாலா கும்பலுக்கும் தொடர்பா? அல்லது சர்வதேச போதைப்பொருட்கள் கடத்தலில் அவர் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் வங்கதேச ராணுவம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19- ஆம் தேதி விடுப்பில் சென்ற ஜான் செல்வராஜ், மார்ச் 21- ஆம் தேதி பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில், வரவில்லை என்றும், அவர் பணியில் தொடர்ச்சியாக இவ்வாறு செல்வது வழக்கமாகக் கொண்டவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…